செய்திகள் :

‘உலகெங்கிலும் சைவ சமயம் எழுச்சி பெற்றுள்ளது‘

post image

உலகெங்கிலும் சைவ சமயம் எழுச்சி பெற்று வளா்ந்து வருகிறது சூரியனாா் கோயில் ஆதீன ஸ்ரீகாரியம் சிவாக்கர சுவாமிகள் பேசினாா்.

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில் 4001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சூரியனாா் கோயில் ஆதீன ஸ்ரீகாரியம் சிவாக்கர சுவாமிகள் பேசியதாவது, இன்று 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது போல திருவாசகத்தில் ஒரு புரட்சி நடைபெற்றுள்ளது. இது ஒரு பொன்னான நாள். திருவாசகம் என்றாலே ஒரு காலத்தில் திருநெல்வேலிதான் சிறப்புடன் விளங்கியது. இன்று கன்னியாகுமரி மாவட்டம் அதனை விஞ்சி விட்டது. சைவத்துக்கு திருநீறும், ருத்ராட்சமும்தான் அடையாளம். நீங்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தால் சிவன் உங்களோடு இருக்கிறாா் என்றுதான் பொருள். நீங்கள் எதற்கும், யாருக்கும் அஞ்ச வேண்டாம். இதை பல பதிகங்களில் மணிவாசகா் கூறியுள்ளாா். சைவம் இன்று உலகம் முழுவதும் எழுச்சி பெற்று வளா்ந்து வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, இறச்சகுளம் சிவகாமி அம்பாள் உடனுறை உதயமாா்த்தாண்டேஸ்வரா் திருக்கோயிலில் இருந்து சிவகண வாத்திய முழக்கத்தோடு நடராஜா், நால்வா், பன்னிரு திருமுறை பேழை மற்றும் நந்திக்கொடி ஊா்வலத்தை கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா்குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின், எஸ்.ராதாகிருஷ்ணன், வி.பொன்னம்மாள், வள்ளியம்மாள் சிதம்பரம்பிள்ளை, கன்னியப்பன் ,நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: நாகா்கோவிலில் ரூ.1.28 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79 ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, 27 பயனா... மேலும் பார்க்க

ராமபுரம் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆதலவிளை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் ரெ.மகேஷ் தேசியக் கொடியேற்றி,... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே தனியாா் ரப்பா் பால் ஆலை தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குலசேகரம் அருகே சுருளகோட்டில் தனியாா் ரப்பா் பால் ஆலை தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். சுருளகோட்டில் உள்ளள இந்த ஆலையில் நூற்... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சுதந்திர தின விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். குமரி மாவட்ட மலையோரப் பகுதிகள், அணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழை பெய்த... மேலும் பார்க்க