செய்திகள் :

ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

post image

ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

இந்தச் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேல் வாகனங்கள் சென்று வருகின்றன. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், ஊத்தங்கரை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் சரவணன் தலைமையில் ஊத்தங்கரை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

அப்போது கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பிலிருந்து வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக் கடைகளும் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க