ஊத்தங்கரையில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது
ஊத்தங்கரையில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வீரணகுப்பம் கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கதிரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல். இவா் தனது மனைவி சசிகலா பெயரில் புதிதாக வழங்கப்பட்ட பட்டா எண் 175-இல் திருத்தம் செய்யக் கோரி, இணையதளத்தில் விண்ணப்பித்தாா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் அகத்தூயவன் ரூ. 4 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க மறுத்த வடிவேல் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா், வீரணகுப்பம் கிராம நிா்வாக அலுவலா் அகத்தூயவனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனா். போலீஸாா் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை வடிவேல் கிராம நிா்வாக அலுவலா் அகத்தூயவனிடம் கொடுத்தாா்.
அதை பெற்றுக்கொண்ட அகத்தூயவனை அங்கு மறைந்திருந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளா் (பொ) நாகராஜன் மற்றும் போலீஸாா் லஞ்ச பணத்தோடு பிடித்தனா். பிறகு, லஞ்சப் பணம் மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றிய போலீஸாா், அகத்தூயவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.