செய்திகள் :

'ஊர் திருவிழாவில் மின்சாரத் திருட்டு'- ரூ.18,000 அபராதம் விதித்த மின்வாரிய அதிகாரிகள்; நடந்தது என்ன?

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சியில் இருக்கும் அலங்காரிபட்டியில் பட்டவன் திருவிழா நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி விழாவான இன்று மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 மந்தைகளில் இருந்து மாடுகளுடன் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.  இந்த விழாவிற்கு தோகைமலை வடக்கு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் அனுமதி பெறாமல் விழா குழுவினர் உயர் அழுத்த மின் கம்பத்திலிருந்து மின்சாரத்தை திருடி திருவிழா நடைப்பெற்ற 4 நாட்களாக விழா கொண்டாடியதாக உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகாரை அடுத்து, குளித்தலையில் உள்ள மின்வாரிய மண்டல செயற்பொறியாளர் சரவணன் உத்தரவின் பேரில் தோகைமலை வடக்கு உதவி பொறியாளர் தேவராஜன் விழா நடக்கும் பகுதிக்கு வருவதாக தெரிந்ததும், அதிகாரிகள் வருவதை அறிந்த விழா குழுவினர் உயர் அழுத்த மண் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடிய வயரை துண்டித்தனர். 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உதவி பொறியாளர் தேவராஜன், விழா குழுவினரிடம் விசாரணை நடத்தினார். அவரின் விசாரணையில் மின்சாரம் திருடப்பட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து விழா நடக்கும் பகுதியில் எத்தனை ஸ்பீக்கர் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது, எத்தனை டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அலங்கார விளக்குகள் எத்தனை உள்ளிட்ட அனைத்தையும் கணக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து, விழாவிற்காக எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை கணக்கீடு செய்து ரூ. 18,000 அபராதம் விதித்தார். கோயில் திருவிழாவுக்கு உயர்மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர்: "மொட்டை மாடியில் இருந்து என் கணவர் தள்ளிவிட்டார்"- வரதட்சணைக் கொடுமை புகார் அளித்தப் பெண்

வேலூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், கை, கால் உடைந்த நிலையில், ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்ப... மேலும் பார்க்க

அறுவை சிகிச்சையால் படுக்கையில் ஆதீனம்; விசாரணைக்கு வந்த போலீஸ்; குவிந்த பாஜகவினர்; நடந்தது என்ன?

உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்த மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணைகடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடை... மேலும் பார்க்க

மும்பை: சிறுவன் மீது நாயை ஏவிக் கடிக்கவிட்டுச் சிரித்த நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை மான்கூர்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றில் ஹம்சா (11) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்நேரம் மொகமத் சொஹைல் ஹசன் என்பவர் கொண்டு வந்த வளர்ப்பு நாய் ஆட்டோவில் ஏறியது.... மேலும் பார்க்க

டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடுத்த இன்ஸ்டா சாட்டிங்

டெல்லி உத்தம்நகரில் வசித்தவர் கரண் தேவ் (36). இவரது மனைவி சுஷ்மிதா. கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் ஷாக் பட்டுவிட்டதாகக் கூறி கரண் தேவை அவரது மனைவியும், உறவினர்களும் அங்குள்ள ராணி ரூப்ராணி மரு... மேலும் பார்க்க

மதுரை: வரதட்சணை கேட்டு மனைவிக்குக் கொடூர சித்திரவதை; தலைமறைவான போலீஸ் கணவன் கைது

கூடுதலாக வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.கைதுதனியார்ப் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், மதுரை அப்பன் திருப்ப... மேலும் பார்க்க

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை... மேலும் பார்க்க