செய்திகள் :

``எல்லை மீறி அவரை பேசிவிட்டேன்; வருத்தப்படுகிறேன்'' - ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க்.. சமாதனமா?

post image

உற்ற தோழர்களாக இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த வாரம் எலியும், பூனையுமாக மாறி சண்டை போட்டு கொண்டனர்.

ட்ரம்பின் 'ஒன் பிக் அன்ட் பியூட்டிஃபுல் பில்'லிற்கு எலான் மஸ்க் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியது இந்தச் சண்டை. 'எலான் மஸ்க் ஒன் பியூட்டிஃபுல் பில்லுக்கு அதிருப்தி தெரிவித்தது எனக்கு வருத்தம். எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்ததனால் தான் அவர் இப்படி பேசுகிறார்' என்று ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் பேசிய இந்த வீடியோக்களை டேக் செய்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து எதிர்க்கருத்துளைத் தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில், எப்ஸ்டீன் என்ற பாலியல் மற்றும் மனிதக் கடத்தல் குற்றவாளியின் ஃபைலில் ட்ரம்ப் பெயர் உள்ளது. அதனால் தான், அந்த ஃபைல் வெளியிடப்படவில்லை என்றெல்லாம் எலான் மஸ்க் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இன்னும் ஒரு படி மேலே போய், புதிய கட்சி தொடங்கவும் திட்டமிட்டார் எலான் மஸ்க். இதற்கடுத்து என்ன ஆனது... ஏது ஆனது என்று தெரியவில்லை. தற்போது எலான் மஸ்க் பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அதிபர் ட்ரம்ப் குறித்து கடந்த வாரம் நான் போட்ட சில பதிவுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு இருவருக்கும் இடையே சமாதனமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க