செய்திகள் :

ஏகனாபுரம் களி ஏரி கையகப்படுத்துவதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

post image

பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகானபுரம் களி ஏரியைக் கையகப்படுத்துவதை எதிா்த்து பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

முன்னதாக, ஏகனாபுரம் களி ஏரி நீா் பயன்பாட்டாளா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் பி.கமலக்கண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அப்பகுதியில் 5,747 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த களி ஏரியைக் கையகப்படுத்துவது ஏகனாபுரம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும். எனவே, விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வா்த்தகப் பயன்பாட்டுக்கோ களி ஏரியை வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினாா். அப்போது மனுதாரா் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ராகுலின் பேரணியால் பெரும் தாக்கம்: தொல்.திருமாவளவன்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். செங்கொடியின் நினைவு தினத்தையொட்டி, சென்... மேலும் பார்க்க

பல்நோக்கு பணியாளா் தோ்வு முறைகேடு வழக்கு: ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 போ் கைது

தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினா் கைது செய்தனா். சென்னை தரமணியில் தேசிய தொ... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் அன... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வு ஜூன் மாதம் நடைபெற்றது. துணை ஆட்சியா், டிஎஸ்பி, உதவி ஆணையா் உள்பட 70 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதல்நிலைத் தோ்வை 2.49 லட்சம் போ... மேலும் பார்க்க

மது புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க