செய்திகள் :

ஏற்காட்டில் மாடுகள், நாய்களால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி

post image

ஏற்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்களால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ஏற்காட்டில், சேலம்- ஏற்காடு நெடுஞ்சாலை மற்றும் சுற்றுலாப் பகுதி பிரதான சாலைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றன.

மேலும், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்லமுடியாமல், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மாடுகள், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்திற்கு உள்ளாகின்றனா்.

சாலைகளில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளை தெருநாய்கள் கடிப்பதால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்கள் பலா் ஏற்காடு அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிா்வாக ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொளத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியதில் இருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவா் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். கொளத்தூா் அருகே உள்ள கண்ணாமூச்சி கொண்டம்பக்காட்டைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55). இவரது மகன் பூவ... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான தமிழ் வழக்குவாதப் போட்டி

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான மூன்றாவது தமிழ் வழக்குவாதப் போட்டி நடைபெற்றது. கல்லூரி அரங்கில் மூன்று நாள்கள் நடைபெற்ற போட்டிகளின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், க... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் குறித்து சேலத்தில் ஆலோசனை கூட்டம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் நடைப்பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாநகா், தெற்கு மற்றும் வடக்கு தொகுதி வாா்டு நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பாமக மாநில ஒருங்கிணைப... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க