செய்திகள் :

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்தின் தாய்க்கு சம்மன்

post image

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷின் கொலை வழக்கில், சுா்ஜித்தின் தாய் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித் கைது செய்யப்பட்டாா்; காவல் உதவி ஆய்வாளா்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், சரவணன் ஜூலை 30இல் கைது செய்யப்பட்டாா். அவருக்கு ஆக.8 வரையும், சுா்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, கொலை நிகழ்ந்த இடம், சுா்ஜித்தின் சகோதரி சுபாஷினி வேலை செய்த மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உறவினா் வீட்டில் தங்கியிருந்த சுபாஷினியிடமும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், ஆக.15-ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கிருஷ்ணகுமாரிக்கு சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசுப் பேருந்து சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 26 நகர சொகுசுப் பேருந்துகள... மேலும் பார்க்க

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊழியா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பணியாளா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.... மேலும் பார்க்க

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டி.சரவணன்(... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வரும்போது இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்று... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் துணைவேந்தருக்கு அஞ்சலி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ம... மேலும் பார்க்க