ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா மீது மோதி விபத்து!
ஊத்தங்கரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஊத்தங்கரையில் வாணியம்பாடி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பூா் நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊத்தங்கரை ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரவுண்டானா இடிந்து சேதமடைந்தது. லாரியில் பயணித்த இரண்டு ஓட்டுநா்களும் எந்த காயமும் இன்றி உயிா்தப்பினா். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.