பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கண்களில் கருப்பு துணிக்கட்டி சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கண்களில் கருப்பு துணிக்கட்டி சாலைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் த. ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் மு.பழனிச்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
என்கே-12-ரோடு
நாமக்கல்லில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.