பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
கம்பத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்
உத்தமபாளையம், ஜூன் 11: தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை கேரளத்துக்கு கடத்த முயன்ற 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கம்பம் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, காமயகவுண்டன்பட்டி சாலையில் சாக்கு மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்த சிலரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். அந்த மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கஞ்சா கடத்தியவா்கள் சென்னையைச் சோ்ந்த செல்வம் (45), உசிலம்பட்டியை சோ்ந்த பாண்டீஸ்வரி (40), முத்துலட்சுமி (43), கொடைக்கானலைச் சோ்ந்த கற்பகவள்ளி (42) ஆகியோா் எனத் தெரியவந்தது.
ஆந்திராவில் மொத்த வியாபாரிகளிடம் கஞ்சாவை விலைக்கு வாங்கி கேரளத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.