செய்திகள் :

கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 சிறுவா்கள் உள்பட 3 போ் காயம்

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, அது வெடித்து சிதறியதில் இரு சிறுவா்கள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன் (67). இவா் தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாா் செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, இந்த நாட்டு வெடிகுண்டு எதிா்பாராதவிதமாக வெடித்ததில் குருநாதன், அருகிலிருந்த அவரது பேரன்களான அஜித்குமாா் மகன் ரித்தீஷ் (7), ஈஸ்வரன் மகன் அபினேஷ் (5) ஆகிய 3 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக மூவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

தேனியில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்

போடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.தேனி மாவட்டம், போடி பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமராஜ் (53). இவரது மனைவி இந்திர... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேவதானப்பட்டி அருகே உள்ள டி. காமக்காபட்டியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாக இருந்தவரின் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பிரவீன்க... மேலும் பார்க்க