செய்திகள் :

கர்நாடகாவில் முதல்வர் மாற்றமா? - சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என்ன சொல்கிறார்கள்?

post image

கர்நாடகாவில், தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் டி.கே சிவக்குமாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற குரல் வலுபெற்று வருகிறது.

அதற்கான அவசியம் இருக்கிறதா என்று காங்கிரஸ் மேலிடமும் காங்கிரஸின் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்து, ஆழம் பார்த்து வருகிறது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

டி.கே சிவக்குமார் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில் டி.கே சிவக்குமார் இன்று பேசுகையில், "என்னிடம் என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நின்று, அவரை ஆதரிக்க வேண்டும். கட்சி மேலிடம் என்ன கூறுகிறதோ, அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ, அது நிறைவேற்றப்படும்.

நான் யாரிடமும் எனக்கு ஆதரவாகப் பேச சொல்லவில்லை. ஒரு முதலமைச்சர் இருக்கும்போது, இந்த மாதிரியான விஷயங்களுக்கு கேள்வியே கிடையாது. நான் மட்டுமல்ல... நிறைய பேர் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். கட்சிக்காக லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள் உழைத்திருக்கிறார்கள், முதலில் அவர்களைப் பற்றி யோசிப்போம்" என்று பேசியிருந்தார்.

சித்தராமையா பதில்

மேலும், இப்போதைய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நான் தான் ஐந்து ஆண்டுகளுக்கு கர்நாடகாவின் முதலமைச்சர். அதில் எதாவது சந்தேகம் உள்ளதா?" என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, இப்போதைக்கு கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் இல்லை என்பது தெளிவாகிறது.

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க