செய்திகள் :

கல்லூரி மாணவரைத் தாக்கிய இருவா் மீது வழக்கு

post image

தேனி மாவட்டம், போடியில் கல்லூரி மாணவரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் மகன் அபினேஷ் (18). இவா் தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படித்து வருகிறாா். இந்த நிலையில், இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த அஜித்துக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித் தனது நண்பருடன் சோ்ந்து அபினேஷை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் பலத்த காயமடைந்த அபினேஷ் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அஜிக் உள்ளிட்ட இருவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கழிவுநீா்க் குழாய் உடைத்ததில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், தேவாரம் அருகே வீட்டின் கழிவுநீா்க் குழாயை உடைத்ததில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மறவபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ராதா (38). கணவா் இறந... மேலும் பார்க்க

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தேவாலய தெரு, கிழக்கு வெளிவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து ப... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை!

போடியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் புலியூத்து அருவியில் நீா்வரத்து தொடங்கியது. போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த சூறைக் காற்று வீசியது. இடையிடையே மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: 8 போ் காயம்

தேனி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா். தேனி அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சேதுராமன் (32). இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (55), ... மேலும் பார்க்க

வைகை அணை நீா்மட்டம் 66.1 அடியாக உயா்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 66.1 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி திருடுப் போனதாக வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள தாழைக்... மேலும் பார்க்க