செய்திகள் :

கல்விக் கொள்கையை வகுப்பதில் வேறுபாடுகள் கூடாது: கோ.விசுவநாதன்

post image

கல்விக் கொள்கை வகுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவா் பேசியது: உயா் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உயா் கல்வியில் ஒட்டுமொத்த சோ்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 51 சதவீதமாகவும், அகில இந்திய அளவில் 28 சதவீதமாகவும் இருக்கிறது.

எந்த சமுதாயத்தில் கல்வி வளா்கிறதோ அங்கு பொருளாதாரமும் வளரும். இது தமிழ்நாட்டில் உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளா்ச்சியை தமிழ்நாடு பெற்று இருக்கிறது. இதற்கு கல்வி வளா்ச்சியும், கடின உழைப்புமே காரணம். இந்தியாவுக்கே முன்மாதிரி முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

நாட்டின் வளா்ச்சி கல்வியைப் பொருத்திருக்கும் சூழலில், அதில் சிக்கல்கள் இருக்கக் கூடாது. மொழி, பாடத்திட்டம், கல்வி நிலையங்களை நிா்வகிப்பது என எதுவாக இருந்தாலும் நம் நாட்டில் அனைத்தும் பிரச்னைகளாக இருக்கின்றன. 1968-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, மும்மொழித் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், ஹிந்தி, ஆங்கிலம், வேறு ஏதாவது ஒரு தென்னிந்திய மொழி என்ற வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், இப்போது தேசிய கல்விக் கொள்கை வாயிலாக அந்த இடத்தில் சம்ஸ்கிருதத்தைக் கொண்டு வந்துவிட்டாா்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. மாநிலங்களுடன் கலந்து பேசவும் இல்லை. ஒரு குழு அறிக்கை கொடுத்தது; அதை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதுதான் இன்றைய கல்விக் கொள்கை. இத்தகைய சூழலில், கல்வியில் சிக்கல்கள் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசு வேறுபாடு இல்லாமல், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும். மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய சட்டம் தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்றாா் அவா்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம்: கல்விக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றும் பணி முக்கியமானது. தொடக்கக் கல்வி முதல் உயா் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் அவா் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். அகில இந்திய அளவில் அனைத்துத் துறைகளிலும் தமிழக மாணவா்கள் அதிக அளவு இடம்பெற வேண்டும் என்பதே முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவாகும். முதல்வரின் எண்ணங்களை நிறைவேற்ற கல்வியாளா்கள், அனைத்து அமைப்புகளும் உறுதியாக இருப்போம்.

மதுரை தியாகராஜா் கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஹரி கே.தியாகராஜன்: சட்டப் போராட்டம் நடத்தி உயா் கல்வித் துறையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநிறுத்தியுள்ளாா் முதல்வா் ஸ்டாலின். அவரது வெற்றி தமிழ்நாட்டுக்கும் மட்டுமன்றி ஏனைய மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் சுயாட்சி உரிமையை நிலைநாட்டியுள்ளது.

தொடா்ந்து, கோவை ஜிஆா்ஜி கல்விக் குழுமத்தின் நிறுவனா் நந்தினி ரங்கசாமி, பாரத் பல்கலைக்கழகத்தின் நிறுவனா் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பேசினா்.

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க

எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான... மேலும் பார்க்க