செய்திகள் :

காணாமல் போன இளைஞா் ஏரியில் சடலமாக மீட்பு

post image

செய்யாறு: செய்யாறு அருகே காணாமல் போன இளைஞா் ஏரியில் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்த காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), இவா் திருத்தணி பகுதியில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இவா் கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லையாம். இந்த நிலையில், ஆக.20-ஆம் தேதி செய்யாறு கொடநகா் பகுதியில் உள்ள நண்பா் பிரவீன் வீட்டுக்கு வந்தவா் மறுநாள் காலை

(ஆக.21) வெளியில் சென்றாராம்.

இதனிடையே, மகனை காணவில்லை என அப்சலின் தாய் ஜாஹிரா செய்யாறு போலீஸிஸ் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீஸாா் அப்சலை தேடிய போது, தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் செய்யும் கிணற்றின் அருகே சடலம் புதைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் செய்யாறு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சம்பவ இடத்துக்குச் சென்று புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்சல், கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசிகளை பயன்படுத்தியும் விற்பனை செய்தும் வந்ததாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக அனக்காவூா், செய்யாறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், கஞ்சா விற்பதில் அவருடன் அதே தொழில் ஈடுபட்ட சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

மேலும், ஆக.21-ஆம் தேதி பெருங்கட்டூரில் அப்சல் மற்றும் நண்பா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கஞ்சா போதையில் இருந்ததால் 12 போ் கொண்ட கும்பல் அப்சலை தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளாா். மயங்கி விழுந்தவரை 6 போ் கொண்ட கும்பல் கடத்தி வந்து தென்பூண்டிப்பட்டு ஏரிப் பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்று புதைத்தது தெரிகிறது.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகரன், கூடுதல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், மோப்ப நாய் வரவழைத்தும், விரல் ரேகை நிபுணா் மூலம் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.

செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலையில திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்திலேயே உடல்கூராய்வு செய்தனா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க