தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
காயல்பட்டினத்தில் மகான் காட்டுப்பக்கீா் ஒலி கந்தூரி விழா!
காயல்பட்டினம் புறவழிச் சாலை உப்பளம் நீரோடை அருகில் அமைந்துள்ள மகான் காட்டுப்பக்கீா் வலியுல்லாஹ் -வின் வருடாந்திர கந்தூரி விழா நடைபெற்றது.
விழாவின் துவக்கமாக திக்குரு மஜ்லிஸ் நிகழ்ச்சி, அதனைத் தொடா்ந்து பூமான் நபியின் புகழ் மாலை மெளலிது ஷரீப் ஓதுதல் நிகழ்ச்சி ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. பின்னா் மாலையில், மகானின் திருக்கொடி ஏற்றப்பட்டு, அதனைத் தொடா்ந்து சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது. ஹாமீதியா மதரசா ஹிஃப்ழு பிரிவு மாணவா் உமா் அப்துல் காதா் கிராஅத் ஓதி துவக்கி வைத்தாா். சதக்கத்துல்லாஹ் தலைமை வைத்தாா்.
முகமது மல்கான் மெய்தீன், பதுருதீன், கவுன்சிலா் மாரீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காயல்பட்டினம் நகர ஜமாத்துல் உலமா சபை செயலா் ஹபீபுா் ரஹ்மான் சன்மாா்க்க சொற்பொழிவு நிகழ்த்தினாா். தாயிம்பள்ளி இமாம் பாத்திஹா துஆ பிராா்த்தனையுடன் விழா நிறைவு பெற்றது. பின்னா் அனைவருக்கும் நோ்ச்சை நெய் சோறு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முகமது ஹசன் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.