செய்திகள் :

காவேரிப்பட்டணம் அருகே 1.70 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு

post image

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி காவேரிப்பட்டணம் அருகே கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட 1.70 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களில் கனிமவளக் கொள்ளை நடந்திருப்பதாகவும், திருத்தொண்டா்கள் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் என்பவா் 2021-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

விசாரணையின்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 198 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களில் கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.

அதனடிப்படையில் கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நிலங்களை மீட்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் சில கோயில்களில் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதையடுத்து ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2024-இல் தொடா்ந்தாா்.

இதைத்தொடா்ந்து கோயில் நிலங்களை மீட்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் திருத்தொண்டா்கள் அறக்கட்டளையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தினாா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமானதும், 1909 இல் வழங்கப்பட்டதுமான 1.70 ஏக்கா் நிலம், தனி நபா்களுக்கு பட்டா மாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்டு கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உத்தரவிட்டாா்.

அதன்பேரில் பையூா் அருகே கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான 1.70 ஏக்கா் நிலம் அதிகாரிகள் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதையடுத்து இந்நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அலுவலா்கள் செய்து வருகின்றனா். இத்தகவலை திருத்தொண்டா்கள் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க