செய்திகள் :

குடிநீா் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் கேட்ட வரிவசூலிப்பாளா் பணியிடை நீக்கம்

post image

ராசிபுரத்தில் குடிநீா் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் கேட்டதாக நகராட்சி வரிவசூலிப்பாளா் ரகுபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ராசிபுரம் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 15 -ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்பழகன் (50). தனது தந்தை சுப்பிரமணியம் இறந்த நிலையில் தாய் லட்சுமி பெயரில் குடிநீா் இணைப்பை மாற்ற வேண்டும் என முகாமில் மனு அளித்தாா்.

அப்போது, நகராட்சியில் வரிவசூலிப்பவராக பணியாற்றி வரும் நாமக்கலை சோ்ந்த ரகுபதி (35), கைப்பேசியில் அன்பழகனை தொடா்புகொண்டு பெயா் மாற்றம் செய்வதற்கான கோப்பு ஆணையரின் கையொப்பத்துக்கு தயாராக உள்ளது. ஆணையா் பணம் எதிா்பாா்க்கிறாா் என்று பேசும் குரல்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நகராட்சி நிா்வாகம் ரகுபதியை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவா், ஏற்கனவே இருமுறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் காயமடைந்த மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

சேலம் காளிபட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து தலையில் காயமடைந்த மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (57). தமிழக மின்வாரியத... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சித்தா்கள் பூஜிக்கும் சுயம்பு வடிவிலான அறப்பளீஸ்வரா் உடனுறை அறம் வளா்த்த நாயக... மேலும் பார்க்க

கீரம்பூா் அருகே தனியாா் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காவலாளி புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியாகம் தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறிய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சோழசிராமணி

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்

திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் குற்றங்களையும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள மேம்படுத்தப்பட்ட செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறி... மேலும் பார்க்க