செய்திகள் :

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தேவதானம் ஊராட்சி 3-ஆவது வாா்டு மணற்படுகை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்று வருவதால் இந்த குடிநீா் குழாய் சேதமடைந்ததையடுத்து மணற்படுகை பகுதிக்கான குடிநீா் விநியோகம் தடைப்பட்டது.

இதனால் வேறு ஒரு மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியிலிருந்து தற்காலிக ஏற்பாடாக குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக,இந்த குழாயும் சேதமடைந்ததால் அந்த பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனையடுத்து,அந்த பகுதி மக்கள்,காலிக் குடங்களுடன் தேவதானம் கோரையாற்று பாலம் அருகே ச.அன்பரசன் (42) தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளா் பிரபாகரன், மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னா், ஜேசிபி இயந்திரம் உதவியுடன்,பழுதடைந்த குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடம் கண்டறியப்பட்டு அதனை சரி செய்யும் பணி உடனடியாக நடைபெற்றது.

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க

கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை

கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க