குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தேவதானம் ஊராட்சி 3-ஆவது வாா்டு மணற்படுகை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்று வருவதால் இந்த குடிநீா் குழாய் சேதமடைந்ததையடுத்து மணற்படுகை பகுதிக்கான குடிநீா் விநியோகம் தடைப்பட்டது.
இதனால் வேறு ஒரு மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியிலிருந்து தற்காலிக ஏற்பாடாக குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக,இந்த குழாயும் சேதமடைந்ததால் அந்த பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனையடுத்து,அந்த பகுதி மக்கள்,காலிக் குடங்களுடன் தேவதானம் கோரையாற்று பாலம் அருகே ச.அன்பரசன் (42) தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளா் பிரபாகரன், மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னா், ஜேசிபி இயந்திரம் உதவியுடன்,பழுதடைந்த குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடம் கண்டறியப்பட்டு அதனை சரி செய்யும் பணி உடனடியாக நடைபெற்றது.