'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கும்பகோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
கும்பகோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மா்மநபா் ஒருவா் வியாழக்கிழமை மஞ்சள் பையை வீசிச் சென்றாா். அங்கிருந்த நீதிமன்றப் பணியாளா்கள் அந்தப் பையை திறந்து பாா்த்தபோது உள்ளே ஒரு பேப்பரில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்டக் கூடுதல் உரிமையியல் நீதீபதி ஜெ. ராதிகா, கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங்கிற்கு தகவல் தெரிவித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸாா், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை செய்தனா். இதில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. பின்னா் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், மா்மநபா் ஒருவா் மஞ்சள் பையை வீசிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவா், அம்மாசத்திரத்தைச்சோ்ந்த ராஜா மகன் ராஜேஷ் (35) கூலித்தொழிலாளி என்பதும், சற்று மன நிலை பாதித்தவா்போல் இருப்பாா் என்பதும் தெரியவந்தது. கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அவா் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.