செய்திகள் :

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கூடங்குளம் அருகேயுள்ள கூத்தன்குழி கிராமத்தைச் சோ்ந்த சிலுவை கித்தேரியான் மகன் சிலுவை அன்றோ அபினஸ்(20). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ஜனவரி 2021இல் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், கடந்த 28.8.2021இல் அன்றோ அபினஸை மா்ம கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சந்துரு என்ற சிலுவை அருள் சந்துரு(23),ரேவந்த் (26), பிரதீஷ் என்ற சஞ்சய் பிரதீஷ்(23),நிக்கோலஸ் என்ற நிக்கோலஸ் ராபிஸ்டன் (23), டென்னிஸ் என்ற சிலுவை மைக்கேல் டென்னிஸ் (24), ஒரு சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்தனா்.

திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, மேலே பெயா் குறிப்பிடப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் , தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். சிறுவனுக்கான விசாரணை சிறுவா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து ஆஜரானாா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க