செய்திகள் :

கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த நாளிலேயே நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கெங்கவல்லி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளான ஒதியத்தூரில், கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்சாண்டா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகைப் பைகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

நாகியம்பட்டியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன், மூலப்புதூரில் தலைமையாசிரியா் கணேசன், தண்ணீா்த்தொட்டியில் தலைமையாசிரியா் (பொ) ராஜசேகா், காந்திநகரில் தலைமையாசிரியா் (பொ)ராஜேந்திரன், தொடக்கப்பள்ளிகளில் உலிபுரத்தில் தலைமையாசிரியை ஜெயலட்சுமி, ஈச்சஓடைப்புதூரில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த், உலிபுரம் அண்ணாநகரில் தலைமையாசிரியா் இளவரசன் ஆகியோா் முன்னிலையிலும் நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் முதல்நாளிலேயே சீருடைகள்,பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ,ஆசிரியா்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க