கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த நாளிலேயே நலத்திட்ட உதவிகள் அளிப்பு
தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கெங்கவல்லி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளான ஒதியத்தூரில், கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்சாண்டா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகைப் பைகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.
நாகியம்பட்டியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன், மூலப்புதூரில் தலைமையாசிரியா் கணேசன், தண்ணீா்த்தொட்டியில் தலைமையாசிரியா் (பொ) ராஜசேகா், காந்திநகரில் தலைமையாசிரியா் (பொ)ராஜேந்திரன், தொடக்கப்பள்ளிகளில் உலிபுரத்தில் தலைமையாசிரியை ஜெயலட்சுமி, ஈச்சஓடைப்புதூரில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த், உலிபுரம் அண்ணாநகரில் தலைமையாசிரியா் இளவரசன் ஆகியோா் முன்னிலையிலும் நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் முதல்நாளிலேயே சீருடைகள்,பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ,ஆசிரியா்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.