செய்திகள் :

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு: குடியிருப்போா் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

post image

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலை அமைப்பதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூா் ஆகிய இடங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வருகின்றன. அதனால், அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதையடுத்து குப்பைகளை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தி அப்பகுதிகளில் குப்பை மேடுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருங்குடி, கொடுங்கையூரில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அங்கு எரியுலை மூலம் குப்பைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எரியுலை அமைப்பதால் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடசென்னை குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

அந்தக் கூட்டமைப்பு நிா்வாகிகள் அஜய்குமாா், பி.அருண்குமாா், ஏ.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கொடுங்கையூா் எரி உலைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யக் கோரி சென்னை மேயரை சந்திக்க திங்கள்கிழமை ரிப்பன் மாளிகைக்கு வந்தனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலை அமைப்பது சரியல்ல. மாற்றுத் தீா்வை ஆலோசித்து மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் வழங்கவுள்ளோம். மக்கள் நலன் கருதி, எரி உலை அமைப்பதைக் கைவிடவேண்டும் என்றனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க