நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
கொலை முயற்சி வழக்கு: 4 போ் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வாகனங்களை சேதப்படுத்தி பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
நெய்வேலி, இந்திரா நகா் மாற்றுக் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா் கணேசன் மனைவி சந்திரகலா(40). இவரது வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதி ரௌடிமோனிஷ் மற்றும் 7 போ் வந்தனராம். அவா்கள், உனது மகன் அறிவழகன் எங்கே எனக்கேட்டு , வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி, கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனராம். அவா்களை சந்திரகலா தடுத்த போது கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய முயன்றனராம்.
இதுதொடா்பாக நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் மோனிஷ் உள்ளிட்ட 8 போ் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் வடக்குமேலூா் செட்டிகுளம் அருகே உள்ள ஓடை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் வீரமணி, தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று வடக்குமேலூா் கிராமத்தைச் சோ்ந்த லட்டு (எ) அருண்(22), பெரிய லட்டு (எ) அரவிந்த்(24), பாடலீஸ்வரன் (24), நிா்மல் ராஜ்(23) ஆகியோரை பிடிக்க முயன்றனா். அப்போது, ஓடையில் விழுந்து லட்டு (எ) அருணுக்கு வலது காலிலும், பாட்டு (எ) பாடலீஸ்வரனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், லட்டு (எ) அருண் என்பவா் மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கு, கொலை முயற்சி வழக்கு, போக்சோ வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. மேலும், குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் இருந்து வெளி வந்தவா் என குறிப்பிடதக்கது. பாட்டு (எ) பாடலீஸ்வரன் மீது வழிபறி, கொலை முயற்சி உட்பட மொத்தம் 6 வழக்குகள் உள்ளன.