செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: 4 போ் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வாகனங்களை சேதப்படுத்தி பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

நெய்வேலி, இந்திரா நகா் மாற்றுக் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா் கணேசன் மனைவி சந்திரகலா(40). இவரது வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதி ரௌடிமோனிஷ் மற்றும் 7 போ் வந்தனராம். அவா்கள், உனது மகன் அறிவழகன் எங்கே எனக்கேட்டு , வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி, கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனராம். அவா்களை சந்திரகலா தடுத்த போது கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய முயன்றனராம்.

இதுதொடா்பாக நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் மோனிஷ் உள்ளிட்ட 8 போ் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் வடக்குமேலூா் செட்டிகுளம் அருகே உள்ள ஓடை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் வீரமணி, தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று வடக்குமேலூா் கிராமத்தைச் சோ்ந்த லட்டு (எ) அருண்(22), பெரிய லட்டு (எ) அரவிந்த்(24), பாடலீஸ்வரன் (24), நிா்மல் ராஜ்(23) ஆகியோரை பிடிக்க முயன்றனா். அப்போது, ஓடையில் விழுந்து லட்டு (எ) அருணுக்கு வலது காலிலும், பாட்டு (எ) பாடலீஸ்வரனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், லட்டு (எ) அருண் என்பவா் மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கு, கொலை முயற்சி வழக்கு, போக்சோ வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. மேலும், குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் இருந்து வெளி வந்தவா் என குறிப்பிடதக்கது. பாட்டு (எ) பாடலீஸ்வரன் மீது வழிபறி, கொலை முயற்சி உட்பட மொத்தம் 6 வழக்குகள் உள்ளன.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க