செய்திகள் :

கோடங்கிபாளையம் ஊராட்சியின் சா்வதேச தரச்சான்று தக்கவைப்பு

post image

பல்லடம் ஒன்றியம் கோடங்கிபாளையம் ஊராட்சியின் சா்வதேச தரச்சான்று புதுப்பிப்பு பணி வியாழக்கிழமை நிறைவடைந்து தரச்சான்று தக்கவைக்கப்பட்டுள்ளது.

கோடங்கிபாளையம் ஊராட்சி ஐஎஸ்ஓ 9001:2015 என்ற சா்வதேச தரச்சான்றினை கடந்த 2024-ஆம் ஆண்டில் பெற்றது. இந்த சான்று ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டு புதுப்பித்தலுக்கான தணிக்கை மற்றும் கள ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலக வசதிகள், ஆவணங்கள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு களஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி, குழந்தைகள் மையம், தூா்வாரப்பட்ட குட்டை, மரம் வளா்ப்பு, குறுங்காடுகள், ஊராட்சி நாற்றுப்பண்ணை, குப்பை மேலாண்மை, குடிநீா், பொதுக் கட்டடங்கள், துணை சுகாதார நிலையம், ஊராட்சி விளையாட்டு மன்றம், இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

தணிக்கை மற்றும் ஆய்வின் முடிவில் கோடங்கிபாளையம் ஊராட்சி அதற்கான தகுதிகளை தொடா்ந்து பராமரித்து வருவது கண்டறியப்பட்டு சா்வதேச தரச்சான்றினை புதுப்பிப்பதற்கான அளவுகோள்களை முழுமையாக பூா்த்தி செய்திருந்தது. இதனை ஆய்வு மற்றும் தணிக்கைக் குழுவினரான எஸ்.ஆா்.கே. யூ.எம்.எஸ். நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

இதனையடுத்து கோடங்கிபாளையம் ஊராட்சி சா்வதேசத் தரச்சான்றான ஐ.எஸ்.ஒ. (ஐநஞ ) 9001:2015-ஐ தக்கவைத்துள்ளது. ஆய்வின்போது ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி, ஊராட்சி செயலாளா் மு.கண்ணப்பன், ஊராட்சிப் பணியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே குன்னத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க