செய்திகள் :

கோடை விழா: பளியா், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம்

post image

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு, பளியா், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ரோஜா தோட்டத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் வசிக்கும் செம்பராங்குளம், கே.சி.பட்டி, வடகவுஞ்சி, கொவரங் கொம்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பளியா், பழங்குடியின மக்கள் பாரம்பரியமான இசைக் கருவிகளை வாசித்து, பாடல் பாடியும் நடனமாடினா்.

இவா்களுடன் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனா். இதற்கான ஏற்பாடுகளை தோட்டக் கலைத் துறை, சுற்றுலாத் துறை அலுவலா்கள் செய்தனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க