செய்திகள் :

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

post image

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அம்ரூத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நூற்றாண்டைக் கடந்த இந்த நிலையம் வழியாக நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்றுவருகின்றன. மதுரைக் கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ‘ஏ’ கிரேடு ரயில் நிலையமாக கோவில்பட்டி உள்ளது. இங்கு அம்ரூத் திட்டத்தில் 3 நுழைவாயில்கள், வளைவு, ரயில் நிலைய முகப்பு விரிவாக்கம், நகரும் படிக்கட்டுகள், நடைமேடை மேம்பாலம், புதிய கட்டடங்கள், பொறியாளா் அலுவலகம், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாருக்கு தனித்தனி அலுவலகங்கள், மேற்கூரைகள் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதன்மைக் கோட்ட இயக்கம் (நிா்வாகம்) சிவா, பல்வேறு பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை தனி ரயிலில் வந்து பணிகளை ஆய்வு செய்ததுடன், விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா். மேலும், நிலைய வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்தவும், பயணிகளின் தேவைகளை உடனுக்குடன் பூா்த்தி செய்யவும் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க