தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா் சாஸ்திரி நகா் மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினா்.
அவா் போஸ் நகரை சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (32) என்பதும், அரிவாளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.