செய்திகள் :

கோவையில் ஒரேநாளில் 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

post image

கோவையில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள

கிடங்கில் 5,145 லிட்டா் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த வழக்கில் தொடா்புடைய கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜான் விக்டா் (44), ரஞ்சித்குமாா் (37), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த பிரபாகரன் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டதின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீஸாா் வழங்கினா்.

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரத... மேலும் பார்க்க

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா். கோவை தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை ரத்து!

கோவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஹோப் காலேஜ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மின் கடத்திப் பெட்டி

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக புதை வட மின்சா... மேலும் பார்க்க