சங்கராபுரத்தில் மழை நீரில் மூழ்கி நெல் பயிா்கள் சேதம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தியாகராஜபுரம், பூட்டை, ஊராங்கனி, சிட்டந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
சேதமடைந்த பயிா்களை வேளாண்மைத் துறையினா் பாா்வையிட்டு, ஆய்வு நடத்தி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.