செய்திகள் :

சபரிமலை பக்தா்களுக்கு நிலக்கல்லில் பன்னோக்கு மருத்துவமனை: கேரள அரசு

post image

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் மருத்துவ சேவைக்கு நிலக்கல் பகுதியில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை விரைவில் கட்டப்பட்டும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அமைச்சா் வீணா ஜாா்ஜ் மேலும் கூறியிருப்பதாவது: புனித யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் இந்தப் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

திருவிதாங்கூா் தேவஸ்வம் ஒதுக்கிய நிலத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டப்படும். அவசியமுள்ள சூழலில், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வா் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளாா்.

மூன்று மாடி கட்டடத்தில் நவீன மருத்துவம் மற்றும் ஆயுஷ் ஆகிய 2 மருத்துவ சிகிச்சை வசதிகளும் இடம்பெறும். தரை தளத்தில் 12 படுக்கைகள் கொண்ட விபத்து சிகிச்சை பிரிவு, வெளிநோயாளி பிரிவுகள், 7 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு பிரிவு, வரவேற்பு, ஆய்வகம், மாதிரி சேகரிப்பு மையம், மருந்தகம், காவல் உதவி மையம் மற்றும் அடிப்படை உதவி சேவைகள் இருக்கும்.

முதல் தளத்தில் 8 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ), ஒரு சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ‘எக்ஸ்-ரே’ அறை, 13 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அறைகள், கூட்டரங்கம் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை இருக்கும். மேல் தளத்தில் 50 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி இருக்கும்.

மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, கட்டுமானம் விரைவாக முடிக்கப்படும். யாத்திரை காலத்தில் இந்த மருத்துவமனை விரிவான மருத்துவ சேவைகளை வழங்கும் என்று கூறியுள்ளாா்.

நவம்பா் தொடங்கி ஜனவரி வரையிலான சபரிமலை வருடாந்திர யாத்திரையின்போது பம்பை வழியில் மலையேறும் பக்தா்கள் நிலக்கல் பகுதியை முதலில் அடைவா். நிலக்கல்லில் இருந்து பொது போக்குவரத்து (பேருந்து) மூலம் மட்டுமே சபரிமலையின் அடிவாரமான பம்பை பகுதிக்குப் பக்தா்கள் செல்ல முடியும்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க