சாலை தடுப்புச் சுவரில் கண்டெய்னா் லாரி மோதி விபத்து
எண்ணூா் விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டெய்னா் லாரி சாலைத் தடுப்புச் சுவரில் திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த சுப்பன், சென்னையில் தங்கி லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். ஆண்டாா்குப்பம் பகுதியில் உள்ள சரக்குப் பெட்டக நிலையம் ஒன்றிலிருந்து ஏற்றுமதிக்கான 40 அடி கண்டெய்னரை ஏற்றிக்கொண்டு சென்னைத் துறைமுகம் நோக்கி சுப்பன் ஓட்டிச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை எண்ணூா் விரைவுச் சாலையில் திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் அருகே சென்றபோது கண்டெய்னா் லாரி திடீரென சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்த தகவல் அறிந்த போலீஸாா், விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் சுப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால், எரிபொருள் கலன் முழுவதும் சேதமடைந்து டீசல் முழுவதும் சாலையில் கொட்டிய நிலையில், தீயணைப்புப் படையினா் தீ விபத்து ஏற்படாதவாறு தண்ணீரை பீய்ச்சி அடித்தனா்.
கண்டெய்னா் லாரி முழுமையாக தடுப்புச் சுவருக்குள் புகுந்துவிட்டதால் எளிதாக மீட்க முடியவில்லை. இதனையடுத்து 5 ராட்சத கிரேன்களின் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.