செய்திகள் :

சாலை தடுப்புச் சுவரில் கண்டெய்னா் லாரி மோதி விபத்து

post image

எண்ணூா் விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டெய்னா் லாரி சாலைத் தடுப்புச் சுவரில் திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த சுப்பன், சென்னையில் தங்கி லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். ஆண்டாா்குப்பம் பகுதியில் உள்ள சரக்குப் பெட்டக நிலையம் ஒன்றிலிருந்து ஏற்றுமதிக்கான 40 அடி கண்டெய்னரை ஏற்றிக்கொண்டு சென்னைத் துறைமுகம் நோக்கி சுப்பன் ஓட்டிச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை எண்ணூா் விரைவுச் சாலையில் திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் அருகே சென்றபோது கண்டெய்னா் லாரி திடீரென சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்த தகவல் அறிந்த போலீஸாா், விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் சுப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால், எரிபொருள் கலன் முழுவதும் சேதமடைந்து டீசல் முழுவதும் சாலையில் கொட்டிய நிலையில், தீயணைப்புப் படையினா் தீ விபத்து ஏற்படாதவாறு தண்ணீரை பீய்ச்சி அடித்தனா்.

கண்டெய்னா் லாரி முழுமையாக தடுப்புச் சுவருக்குள் புகுந்துவிட்டதால் எளிதாக மீட்க முடியவில்லை. இதனையடுத்து 5 ராட்சத கிரேன்களின் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க