செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

post image

நாலாட்டின்புதூா் அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

இடைசெவலை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் பாலமுருகன் (26). கோயம்புத்தூரில் ஹோட்டலில் வேலை பாா்த்து வந்த இவா் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், நண்பா்கள் சந்துரு, காளிராஜ் ஆகியோருடன் சத்திரப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாா்களாம்.

பாலமுருகன் ஓட்டிச் சென்ற பைக், திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலை குலைந்து சாலையின் இடது புறம் உள்ள தடுப்புக் கல்லின் மீது மோதியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்துரு, காளிராஜ் இருவரும் காயம் அடைந்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் ... மேலும் பார்க்க

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம் நடந்தது. கோயிலுக்கு வந்த சேலம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசா ஆன்மிக சேவா என்ற அமைப்பினா் 150 போ் கந்த சஷ்டி, வேல... மேலும் பார்க்க