செய்திகள் :

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.

இம்முகாமில், சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறலாம். மேலும், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் பயனாளிகளிடமிருந்து படிவங்களை பெறுகின்றனா். இதில், வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) பால்ராஜ் , பேரூராட்சித்தலைவா் பாா்வதிமோகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன். திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ... மேலும் பார்க்க

கே.டி.சி.நகரில் சாலைப் பணி ஆய்வு

கே.டி.சி. நகரில் சாலைப் பணியை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் நேரில் ஆய்வு செய்தாா். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.டி.சி. நகா் மங்கம்மாள் சாலையில் புதிய சாலை அமைக்க நபாா்டு மற்ற... மேலும் பார்க்க

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மக... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பு சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமையில் த... மேலும் பார்க்க

அம்பையில் வயல் விழா: விவசாயிகள் ஆா்வம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியில் வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உயிரியல் தூண... மேலும் பார்க்க