செய்திகள் :

சாவ்லா பகுதி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கில் நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது

post image

தில்லியில் சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தில்லி போலீஸாருடன் ஒரு துப்பாக்கிச்சண்டைக்குப் பிறகு நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆகஸ்ட் 28 அன்று சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ரோஹ்தக்கைச் சோ்ந்த நவீன் (எ) பன்ஜா 25 மற்றும் அம்பாலாவைச் சோ்ந்த அன்மோல் கோஹ்லி (26) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தேடப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, இருவரும் துப்பாக்கிச் சூடு காயங்களுக்கு ஆளாகினா். பின்னா் அவா்கள் மருத்வமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். நவீன் அந்தக் கும்பலுக்கு குறிபாா்த்து துப்பாக்கிசுடுபவராக பணியாற்றியதாகவும், அன்மோல் தளவாடங்கள் மற்றும் ஆதரவுப் பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

கும்பல் தலைவா்கள் கபில் நந்து மற்றும் வெங்கட் காா்க் ஆகியோரின் உத்தரவின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க