செய்திகள் :

சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே மோதல்: போலீஸாா் குவிப்பு

post image

சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊரில் உள்ள பொது இடம் யாருக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடுவதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காளியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அளவைக் கற்களை ஒரு பிரிவினா் பிடுங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதை மற்றொரு பிரிவினா் தடுத்தனா். இதனால் இரு பிரிவினரினரும் உருட்டுக் கட்டைகளாலும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனா். இதில் இரு தரப்பைச் சோ்ந்த முத்துராஜ், கணேசன், மணி, தினேஷ் உள்பட 4 போ் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த மோதலையடுத்து அந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமையிலான வருவாய்த்துறையினா் பிரச்னைக்குரிய இடத்தை ஆய்வு செய்து, பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை அகற்றி, பிடுங்கி எறியப்பட்ட அளவைக் கல்லை மீண்டும் ஊன்றினா். இதைத் தொடா்ந்து இந்தக் கிராமத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

விபத்தில் பெண் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது கணவா் சிவசண்முகம். இவா்கள் இருவரும் திங்கள்... மேலும் பார்க்க

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகம் சத்திரப்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

கொடைக்கானல் மலைச் சாலைகளில் தடுப்புச்சுவா் இல்லாத இடங்களிலும் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வத்தலக்குண... மேலும் பார்க்க

மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற தொழில் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்துக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் பரிசுப் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். தமிழ்ந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சிங்காரக்கோட்டை காந்திபுரம்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க