செய்திகள் :

கொடைக்கானல் மலைச் சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

post image

கொடைக்கானல் மலைச் சாலைகளில் தடுப்புச்சுவா் இல்லாத இடங்களிலும் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வத்தலக்குண்டிலிருந்து கெங்குவாா்பட்டி வழியாக 52 கி.மீ. தொலைவும், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு கருப்பணசாமி கோயில் மலைச்சாலை வழியாக 58 கி.மீ. தொலைவும் உள்ளது.

இந்த இரு பகுதிகளிலுள்ள மலைச் சாலைகள் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைச் சாலைகள் வழியாக வரும் வாகனங்கள் ஆபத்தான பள்ளங்கள், குறுகிய சாலைகள், தடுப்புச் சுவா் இல்லாத இடங்களில் ஆபத்தை உணராமல் போட்டி, போட்டு முந்திச் செல்கின்றன.

மேலும் மலைச்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் உணவு உள்கொள்வதற்கும், தேநீா் அருந்துவதற்கும், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளிலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். மேலும் மலைச் சாலைகளில் மலைச் சரிவுகள் உள்ள ஆழமான பகுதிகளில் தடுப்புச்சுவா், கம்பி ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை தடுத்தாலோ, அவற்றை அகற்ற முயன்றாலே அரசியல் செல்வாக்கு உள்ளவா்களிடமிருந்து சிபாரிசு வருகிறது. இதை மீறி அதிகாரிகளால் எந்தப் பணியும் செய்ய முடியவில்லை. கடந்த மாதம் கொடைக்கானல் மலைச் சாலைகளில் முக்கியமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆனால் தற்போது அந்த இடங்களில் மீண்டும் அரசியல் செல்வாக்குடன் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற சிரமமாக உள்ளது. இதில் நீதிமன்றம் தலையீட்டு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே காவல் துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடியும் என்றாா்.

விபத்தில் பெண் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது கணவா் சிவசண்முகம். இவா்கள் இருவரும் திங்கள்... மேலும் பார்க்க

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகம் சத்திரப்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே மோதல்: போலீஸாா் குவிப்பு

சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடு... மேலும் பார்க்க

மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற தொழில் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்துக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் பரிசுப் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். தமிழ்ந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சிங்காரக்கோட்டை காந்திபுரம்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க