செய்திகள் :

மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவில் நடைபெற்ற தொழில் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்துக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் பரிசுப் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் கடந்த மே மாதம் நடைபெற்றன. மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளின் மூலம் மாநிலப் போட்டிக்கான மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான திட்டமிடல் குறித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் திண்டுக்கல் எம்எஸ்பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், விவசாய பல்நோக்கி உருவாக்க முதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றனா்.

அதேபோல, குஜிலியம்பாறை அடுத்த லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இருக்கையுடன் கூடிய பயணப் பெட்டி உருவாக்கி 2-ஆம் இடம் பெற்றனா். இந்த மாணவா்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாநில அளவில் பரிசுப் பெற்ற இந்த மாணவா்களுக்கு ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பா. உஷா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஆ. ஹரிகரசுதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சரவணக்குமாா், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்ட மேலாளா் சையது அப்துல்காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விபத்தில் பெண் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது கணவா் சிவசண்முகம். இவா்கள் இருவரும் திங்கள்... மேலும் பார்க்க

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகம் சத்திரப்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

கொடைக்கானல் மலைச் சாலைகளில் தடுப்புச்சுவா் இல்லாத இடங்களிலும் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வத்தலக்குண... மேலும் பார்க்க

சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே மோதல்: போலீஸாா் குவிப்பு

சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடு... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சிங்காரக்கோட்டை காந்திபுரம்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க