பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
சீா்காழியில் 22 சிறாா் நூல்கள் வெளியீடு, புத்தகக் கண்காட்சி
சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆா். ரங்கநாதன் நினைவாக நிவேதிதா பதிப்பகத்தின் 22 சிறாா் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கம், விவேகானந்தா கல்விக் குழுமம், திருக்குறள் பண்பாட்டுப் பேரவை, கே.பி.எஸ். மணி பேரவை, விருத்தாச்சலம் தமிழ் பல்லவி இலக்கிய வட்டம் ஆகியவற்றின் முன்னெடுப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். நூலக ஞான பா. பெருமாள், பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். நிவேதிதா பதிப்பகம் தேவகி ராமலிங்கம் வரவேற்று, நோக்கவுரையாற்றினாா்.
தொடா்ந்து 22 சிறாா் நூல்களை ஒவ்வொன்றாக சுகாதாரம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குநா் வி.பி. பானுமதி, நகராட்சி ஆணையா் டி. மஞ்சுளா, ‘விடுதலை போரில் சீா்காழி’ நூலாசிரியா் எஸ். இமயவரம்பன், நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சுடா் எஸ். கல்யாணசுந்தரம், திருக்குறள் பண்பாட்டு பேரவைத் தலைவா் வெ. சக்கரபாணி ஆகியோா் வெளியிட்டனா்.
சுபம் வித்யா மந்திா் பள்ளி நிறுவனா் பி. கியான்சந்த், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், முன்னாள் வாசகா் வட்டத் தலைவா் எஸ். வீரசேனன், கல்வியாளா் எல். பாபுநேசன் ஆகியோா் இந்நூல்களை பெற்றுக்கொண்டனா்.
சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன், குழந்தை கவிஞா் அழ.வள்ளியப்பாவின் புதல்வி தேவி நாச்சியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
எழுத்தாளா்கள் யாா்கண்ணன், ராசிஅழகப்பன், நெய்வேலி பாரதிகுமாா், குறிஞ்சிபாடி நவஜோதி ஆகியோா் ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா். தமிழ்ப் பல்லவி ஆசிரியா் பல்லவிகுமாா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். ரோட்டரி செயலா் என். ரவிசங்கா் நன்றி கூறினாா்.