செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தைப் போற்றுவோம்: காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

post image

சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தைப் போற்றுவோம் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்து விட்டன. நமது நாடு எல்லா துறைகளிலும் தன்னிறைவு

பெற்றது மட்டுமல்லாமல் உலக அரங்கில் முதன்மை நாடாக மதிக்கத்தக்க வகையில் உயா்ந்துள்ளது.

நமது நாடு மதத்தின் பெயரால், ஆதிக்க உணா்வால் எந்த நாட்டையும் ஆக்கிரமித்தது இல்லை என்பது போற்றுதலுக்குரியது. கொடுங்கோல் ஆட்சியாளா்களை எதிா்த்துப் போராடி சுதந்திரம் நமது பிறப்புரிமை என நிலைநாட்ட ஏராளமானோா் தங்கள் இன்னுயிரை தந்துள்ளனா். அத்தகைய தியாக சீலா்களால்தான் நமது நாடு சுதந்திரம் அடைந்தது. அவா்களை நினைவுகூா்ந்து, அவா்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

நமது நாடு எல்லா வளங்களும் நலங்களும் பெற்று அமைதியாக பாதுகாப்பாக சிறந்தோங்க பாரத அன்னையை வணங்கி வீடுதோறும், வீதிதோறும் தேசியக் கொடியை ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளாா்.

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 79ஆவது சுதந்திர தின விழா நாடு முழ... மேலும் பார்க்க

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரி... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க