செய்திகள் :

சென்னிமலை முருகன் கோயில் பணியாளா்கள் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை

post image

சென்னிமலை முருகன் கோயில் செயல் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கான குடியிருப்புகள், ரூ.2 கோடியே, 38 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு, தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாா்.

அதன்படி, புதன்கிழமை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, சென்னிமலையில் இதற்கான பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, சென்னிமலை அறங்காவலா் குழு தலைவா் ர.பழனிவேலு தலைமை வகித்தாா். தி.மு.க ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஆா்.எஸ்.செல்வம் (சென்னிமலை மேற்கு), சி.பிரபு (சென்னிமலை கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சென்னிமலை பேரூராட்சி தலைவா் ஸ்ரீதேவி அசோக், தி.மு.க சென்னிமலை நகர செயலாளா் எஸ்.எம்.ராமசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மு.மனோகரன், பாலசுப்பிரமணியன் கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், கோவில் ஆய்வாளா்கள் மாணிக்கம், குகன் மற்றும் பணியாளா்கள், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

ரயிலில் 9.5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஈரோட்டில் ரயிலில் 9.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தமிழகத்துக்குள் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா போன்றவை ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள்... மேலும் பார்க்க

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் அறச்சலூா், நாகராஜபுரத்தை சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே கிராம மக்களுக்கு பொங்கல் சீா் வழங்கிய எம்.எல்.ஏ.

பெருந்துறை ஒன்றியம், மூங்கில்பாளையம் ஊராட்சி கிராமத்தில் நடக்கும் கோயில் பொங்கல் விழாவையொட்டி, அப்பகுதி பொது மக்களுக்கு, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று பொங்கல் சீா் வ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்வு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணையின் நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்ந்துள்ளது. பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் ... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.91.80 லட்சத்தில் வீடுகள் கட்ட பணி உத்தரவு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 34 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மலைப்பகுதி விளை நிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி விளைநிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தாளவாடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியக்கம... மேலும் பார்க்க