செய்திகள் :

சென்னை: பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் அடித்துக் கொலை... விசாரணையில் சிக்கிய திருநங்கை!

post image

சென்னை புதுவண்ணாரப்பேட்டை எம்.பி.டி பள்ளி அருகே உள்ள பிளாட்பாரத்தில் வசித்தவர் ஜான் பாஷா (39). இவர் கடந்த 23.5.2025-ம் தேதி மயங்கிய நிலையில் கிடப்பதாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ ஊழியர்கள் அங்கு வந்து ஜான் பாஷாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து ஜான் பாஷாவின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

கைது

இந்த நிலையில் ஜான் பாஷாவின் சடலத்தை பிரேத பரசோதனை செய்த டாக்டர்கள், அவரின் கழுத்து, உடலில் சில இடங்களில் உள்காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதனால் ஜான் பாஷா, இயற்கையாக மரணம் அடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் ஜான் பாஷா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``பிளாட்பாரத்தில் வசித்து வந்த ஜான் பாஷா, கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் மது அருந்தியிருக்கிறார். போதையிலிருந்த ஜான் பாஷாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை மலாய்க்கா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் திருநங்கை மலாய்க்கா அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அதிகாலையில் ஜான் பாஷா படுத்திருந்த பிளாட்பாரத்துக்கு மலாய்க்கா வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த திருநங்கை மலாய்க்கா, கைகளால் ஜான்பாஷாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார். அதன் காரணமாக அவர் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி திருநங்கை மலாய்க்காவை கைது செய்தோம். அவரிடமிருந்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு ``திருநங்கை மலாய்க்கா உள்பட சில திருநங்கைகள் ஜான் பாஷா படுத்து உறங்கும் பிளாட்பார பகுதிக்கு அடிக்கடி நள்ளிரவில் வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று திருநங்கை மலாய்க்கா, அங்கு வந்திருக்கிறார். அப்போது போதையிலிருந்த ஜான் பாஷாவின் பையில் பணம் இருந்திருக்கிறது. அதைப்பார்த்ததும் ஜாலியாக இருக்கலாம் என ஜான் பாஷாவை திருநங்கை மலாய்க்கா அழைத்ததாகத் தெரிகிறது. அதில் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க