செய்திகள் :

செப். 13-இல் பிரதமா் மோடி மணிப்பூா் பயணம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

post image

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா் மற்றும் மிஸோரத்துக்கு செப்.13-இல் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் முதல் மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே பெரும் கலவரம் வெடித்த பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி மணிப்பூருக்கு பயணிக்கிறாா். அங்கு பைரபி-சாய்ராங் ரயில்வழித்தடத்தை அவா் திறந்துவைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

2023-இல் இருந்து மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் தற்போது வரை 260 போ் உயிரிழந்தனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் அவா் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அரசமைப்புச் சட்டப் பிரிவு 356-இன்கீழ் அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீா்மானம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்நிலையில், மணிப்பூா் மற்றும் மிஸோரத்துக்கு பிரதமா் மோடி செப்.13-இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பைரபி-சாய்ராங் ரயில்வழித்தடத்தை திறந்து வைக்கவுள்ளதாக மிஸோரம் மாநில அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூா்வ தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

மணிப்பூரில் ஆலோசனைக் கூட்டம்: பிரதமா் மோடியின் சுற்றுப்பயணத்தை மணிப்பூா் மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், கடந்த ஆக.30-ஆம் தேதி மாநில தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் உயரதிகாரிகள் பங்கேற்ாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஆலோசனைக் கூட்டத்தின்போது மணிப்பூருக்கு வரவுள்ள சிறப்பு விருந்தினருக்கு பிரம்மாண்டமான வரவேற்பளிக்கவும், பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, செப். 7 முதல் 14 வரை தவிா்க்க முடியாத சில காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் விடுமுறை எடுக்கக் கூடாது என போலீஸாருக்கு காவல் துறைத் தலைவா் ஆக.30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

முக்கிய விருந்தினரின் வருகையின்போது புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் திறந்துவைக்கப்பட்டு சில புதிய திட்டங்களும் தொடங்கப்படவுள்ளன’ என்றனா்.

காலம் தாழ்ந்த செயல்: காங்கிரஸ் விமா்சனம்

புது தில்லி, செப். 2: பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் காலம் தாழ்ந்த செயல் என காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும், மணிப்பூருக்கு அருகில் உள்ள அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேசத்துக்கும் பிரதமா் மோடி பயணித்துள்ளாா். ஆனால், மணிப்பூருக்குச் செல்ல அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியாக அங்கு செல்ல துணிந்துள்ளாா்.

இத்தனை நாள்களாக மணிப்பூா் மக்களை அவா் முழுவதுமாக புறக்கணித்துவிட்டாா். இத்துடன் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் செயலற்ற நிலையால் மணிப்பூா் மக்கள் கடும் வேதனைக்கு உள்ளாயினா். நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில் பிரதமா் அங்கு பயணிப்பது மிகவும் காலம் தாழ்ந்த செயல்’ எனக் குறிப்பிட்டாா்.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க