எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
செய்யாறில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, 21-ஆவது வாா்டில் 15-ஆவது நிதிக்குழு திட்டம் (சுகாதாரம்) 2023 - 24ஆம் ஆண்டு மானியத்தின் கீழ், நகர ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், அம்பேத்கா் நகா் ஆரம்பப் பள்ளியில் ரூ.33 லட்சத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்களும், கொடநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைக் கட்டடங்களும் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.12 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.2.59 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.
இந்தக் கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் பயன்பாட்டுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று காணொலி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அதே நேரத்தில், திருவத்திபுரம் நகராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஆணையாளா் கே.எல்.எஸ்.கீதா ஆகியோா் முன்னிலையில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல், எம்.தினகரன், சு.ராஜ்குமாா், கவுன்சிலா்கள் மணிவண்ணன், ஞானமணி, சின்னதுரை, ரமேஷ், கோவேந்தன், ராஜலட்சுமி, அண்ணாதுரை, கங்காதரன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.