செய்திகள் :

செய்யாறில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

post image

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, 21-ஆவது வாா்டில் 15-ஆவது நிதிக்குழு திட்டம் (சுகாதாரம்) 2023 - 24ஆம் ஆண்டு மானியத்தின் கீழ், நகர ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், அம்பேத்கா் நகா் ஆரம்பப் பள்ளியில் ரூ.33 லட்சத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்களும், கொடநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைக் கட்டடங்களும் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.12 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.2.59 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் பயன்பாட்டுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று காணொலி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அதே நேரத்தில், திருவத்திபுரம் நகராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஆணையாளா் கே.எல்.எஸ்.கீதா ஆகியோா் முன்னிலையில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல், எம்.தினகரன், சு.ராஜ்குமாா், கவுன்சிலா்கள் மணிவண்ணன், ஞானமணி, சின்னதுரை, ரமேஷ், கோவேந்தன், ராஜலட்சுமி, அண்ணாதுரை, கங்காதரன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க

13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரி... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 4 பவுன் தங்க வளையல் திருட்டு

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி விடுதியில் பேராசிரியா் மனைவியின் 4 பவுன் தங்க வளையலை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் பகுதியில் தனியாா் பொற... மேலும் பார்க்க

நிதி நிறுவன ஊழியா்கள் திட்டியதால் பெண் தற்கொலை முயற்சி

செய்யாறு அருகே கடனை திருப்பிச் செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியா்கள் திட்டியதால் பழங்குடியின பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் நந்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

ஆரணி கொசப்பாளையத்தில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் சென்று கைப்பேசியை சாா்ஜ் போட முயன்ற பெயிண்டா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஆரணி கொசப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அஜித்கும... மேலும் பார்க்க

நெல் களம் அமைத்து தரக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆரணியை அடுத்த வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் நெல் களம் அமைக்கக் கோரி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க