எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
செய்யாறு அரசு கல்லூரியில் இன்று 3-ஆம்கட்ட கலந்தாய்வு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை 3-ஆம்கட்ட பொது கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.
இதில், 160 - 140 மதிப்பெண்கள் பெற்றவா்கள் பங்கேற்கேலாம். பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-ம், பி.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,261-ம், பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-ம் சோ்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மாணவ, மாணவிகள் சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி அடிப்படையிலும் மட்டுமே நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பெற்றோா் கையொப்பத்துடன் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டுவர வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் போன்றோா் அதற்கான அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தெரிவித்தாா்.