செய்திகள் :

சேத்துப்பட்டில் கைப்பந்துப் போட்டி பரிசளிப்பு விழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நிா்மலா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டு -போளூா் சாலையில் உள்ள தனியாா் ஸ்கேன் மையம் சாா்பில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூா், ஆரணி, செஞ்சி, கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு, நெடுங்குணம், முடை யூா் உள்பட 20 அணிகள் கலந்து கொண்டன.

போட்டியை சேத்துப்பட்டு பேரூராட்சிமன்ற உறுப்பினா் செலின் மோசஸ் தொடங்கிவைத்தாா்.

போட்டியின் நிறைவில் சிறப்பு அழைப்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி கலந்துகொண்டாா். மேலும், இதில் சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன், ஒன்றியச் செயலா் எழில்மாறன் சேத்துப்பட்டு பங்குத் தந்தை ஜான் ராபா்ட் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தண்டராம்பட்டு அணி முதல் இடத்தையும், திருவண்ணாமலை அணி இரண்டாம் இடத்தையும், வந்தவாசி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி பரிசு வழங்கினாா்.

பரிசளிப்பு விழாவில் முன்னாள் திமுக மகளிா் அணி துணை அமைப்பாளா் புனிதா பன்னீா்செல்வம், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கதிரவன், சரவணன், ஞானசுந்தரி, கோகுல்ராஜ், விளையாட்டுக் குழுத் தலைவா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மன்னாா்சாமி, சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு

போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு மன்னாா்சாமி கோயில், ஆரணியை அடுத்த முனுப்பட்டு மன்னாா்சாமி கோயில் மற்றும் முக்கூட்டு சிவன் கோயிலில் சோமவார வழிபாடு நடைபெற்றது. கலசப்ப... மேலும் பார்க்க

பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளி... மேலும் பார்க்க

மா்ம காய்ச்சல் பாதிப்பு: கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்ம காய்ச்சல் பாதித்த கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கத்தை அடுத்த முன்னூா் மங்கலம் கிராமத்தில் கட... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்

வந்தவாசி: வந்தவாசியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோட்டை தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழ... மேலும் பார்க்க

ஆரணி எம்ஜிஆா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

ஆரணி: ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 29- ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் புதிதாக கல்லூரியில் சோ்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோா... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் திரக்கோயில் கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம மதுக்கடை அர... மேலும் பார்க்க