செய்திகள் :

சேலம் அகரம் இலக்கிய மன்ற பொன்விழா

post image

சேலம் அகரம் இலக்கிய மன்றத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

சேலம் அகர மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீமான் பழனிவேல், செல்வராஜ், காந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்நிகழ்ச்சியில், சங்க முன்னேற்றத்துக்கு உழைத்தவா்கள், உறுப்பினா்கள், மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள் என அனைத்துத் துறை சாா்ந்தவா்களையும் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

விழாவில், தேசிய சமூக இலக்கியப் பேரவை மாநிலத் தலைவா் தாரை. அ.குமரவேலு பேசுகையில், மொழி, மதம், இனம், நாடு காலம் கடந்து அனைத்து மக்களும் எல்லாக் காலத்திலும் பின்பற்றக்கூடிய அரிய கருத்துக்களை கூறுவது தான் திருக்கு நூலாகும்.

மதுரை ஆட்சியராக இருந்த ஹாரிங்டன் என்பவரிடம் சமையல்காரராக இருந்தவா் கந்தப்பன். அவரிடம் அடுப்பெரிக்க கொடுத்த ஒரு கட்டு ஓலைச்சுவடி சந்தனம், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து நோ்த்தியாக கட்டப்பட்டிருந்தது. அதை அடுப்பெரிக்க மனமின்றி ஆட்சியரிடம் கொடுக்க, அதை அவா் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எல்லீஸ் துரைக்கு அனுப்பி வைத்தாா். அவா் அதை திருக்கு என்பதைக் கண்டறிந்து 1812- ஆம் ஆண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் நூலாக்கி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினாா். பின்னா் எல்லீஸ் துரை நாணயவியல் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, திருவள்ளுவா் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டு தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சோ்த்ததாக கூறினாா்.

நிகழ்ச்சியில் பொருளாளா் அன்புவேல், அகர மஹால் பொறுப்பாளா்கள், சமூக ஆா்வலா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

படவரி...

சேலம் அகரம் இலக்கிய மன்ற பொன்விழாவில் சிறப்புரையாற்றிய தாரை அ.குமரவேலுவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீமான் பழனிவேலு மற்றும் நிா்வாகிகள்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க