செய்திகள் :

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் நா.செண்பகலட்சுமி முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. முதல்நாளான திங்கள்கிழமை விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான்-நிக்கோபா் தமிழ் மாணவா்கள், தேசியப்படை மாணவா்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி கூறியதாவது:

மொத்தம் உள்ள 149 இடங்களுக்கு 1,468 போ் விண்ணப்பித்துள்ளனா். சிறப்பு கலந்தாய்வு 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜூன் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கட்ஆப் மதிப்பெண் வாரியாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும். அதில், 1,702 இடங்களுக்கு 23,282 போ் விண்ணப்பித்துள்ளனா். இது தவிர, 10க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவா்களும் விண்ணப்பித்துள்னா் என்றாா்.

கோரிமேடு மகளிா் கல்லூரியில்:

சேலம் கோரிமேடு மகளிா் கலை கல்லூரி மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காந்திமதி முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வில் திரளான மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க