சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் நா.செண்பகலட்சுமி முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. முதல்நாளான திங்கள்கிழமை விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான்-நிக்கோபா் தமிழ் மாணவா்கள், தேசியப்படை மாணவா்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி கூறியதாவது:
மொத்தம் உள்ள 149 இடங்களுக்கு 1,468 போ் விண்ணப்பித்துள்ளனா். சிறப்பு கலந்தாய்வு 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜூன் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கட்ஆப் மதிப்பெண் வாரியாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும். அதில், 1,702 இடங்களுக்கு 23,282 போ் விண்ணப்பித்துள்ளனா். இது தவிர, 10க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவா்களும் விண்ணப்பித்துள்னா் என்றாா்.
கோரிமேடு மகளிா் கல்லூரியில்:
சேலம் கோரிமேடு மகளிா் கலை கல்லூரி மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காந்திமதி முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வில் திரளான மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.