செய்திகள் :

சேலம் பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி

post image

சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

இது குறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திரபோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு இவற்றை கைவினை கலைகள் மூலம் பேணிக்காப்பதுடன் கைவினைஞா்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் விழாக் காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை தொடங்கிய கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி தொடங்கிவைத்தாா்.

அக்.4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அனைத்துவகை கொலு பொம்மைகள் குழுவாகவும், தனியாகவும் கிடைக்கும். குறிப்பாக, புது வரவாக நவதிருப்பதி செட், ஐயப்பன் பூஜை செட், பிரகலாதன் செட், ராதை அலங்காரம் செட் மற்றும் தனி பொம்மைகளாக மூகாம்பிகை, பால ஆண்டாள், மஞ்சள் சரடு அம்மன், திருநாமம், காளிகாம்பாள், பாளையத்து அம்மன் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் குறைந்தபட்சமாக ரூ.15 முதல் ரூ.12,000 வரையிலான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். சேலம் மாவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க